ரியல் ஹீரோவா இருங்க! ரீல் ஹீரோ வேண்டாம்! நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

 
ரியல் ஹீரோவா இருங்க! ரீல் ஹீரோ வேண்டாம்! நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.1 லட்சம் அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரியல் ஹீரோவா இருங்க! ரீல் ஹீரோ வேண்டாம்! நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.

ரியல் ஹீரோவா இருங்க! ரீல் ஹீரோ வேண்டாம்! நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

From around the web