சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... கூடு​தல் ​போலீஸ் பாது​காப்பு!

 
தமிழக அரசு

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலை​யில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்​கப்​பட்​ட​தால், தலைமைச் செயல​கத்​தில் கூடுதல் ​போலீஸ் பாது​காப்பு ​போடப்​பட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூரில் உ

தமிழக அரசுள்ள காவல்​துறை தலைமை காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனை​யில் பேசிய நபர், ‘சென்னை​யில் உள்ள தலைமைச் செயல​கம், டிஜிபி அலுவலகம் ஆகிய​வற்றுக்கு வெடிகுண்டு வைத்​துள்ளேன். அது சற்றுநேரத்​தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள்’ எனக் கூறியுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து, 2 இடங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி​களுடன் சென்​றனர். தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகம் முழு​வதும் சோதனை மற்றும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. சந்தேகப்​படும்​படியான பொருட்கள் எதுவும் கிடைக்க​வில்லை.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் மது போதையில் மிரட்டல் விடுத்தார் என்பதையறிந்த போலீசார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

From around the web