இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!!..

 
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!!..

சென்னை எழும்பூர் – சேலம் இடையே வாரத்திற்கு 3 முறை அதிவிரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூர் – சேலம் – சென்னை எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, ரயில் எண்.22153 / 22154 சென்னை எழும்பூர் – சேலம் – சென்னை எழும்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இரவு 11.55 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலத்தை சென்றடையும்.

அதேபோல் மறுமாா்க்கமாக, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

From around the web