ஜூலை 23 முதல் முன்பதிவு தொடக்கம்!

 
ஜூலை 23 முதல் முன்பதிவு தொடக்கம்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜூலை 23 முதல் முன்பதிவு தொடக்கம்!


முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

ஜூலை 23 முதல் முன்பதிவு தொடக்கம்!


இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள https://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இணைய வசதி இல்லாதவர்கள் அனைவரும் அருகில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web