BREAKING!! பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு!! அரசாணை வெளியீடு!

 
BREAKING!! பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு!! அரசாணை வெளியீடு!


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க இருக்கிறது. இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “2022 தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதன் தொகை பயனாளி ஒருவருக்கு ரூ.505/- . இந்த தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.


பொங்கல் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள்:

BREAKING!! பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு!! அரசாணை வெளியீடு!

பச்சரிசி -1 கி
வெல்லம் – 1கி
முந்திரி – 50கி
திராட்சை – 50கி
ஏலக்காய் – 10கி
பாசிப்பருப்பு – 1/2கி
நெய் – 100கி
மஞ்சள்தூள் – 100கி
மிளகாய் தூள் – 100கி

BREAKING!! பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு!! அரசாணை வெளியீடு!


மல்லித்தூள் – 100கி
கடுகு – 100கி
சீரகம் – 100கி
மிளகு – 50கி
புளி – 200கி
கடலைபருப்பு – 250கி
உளுத்தம்பருப்பு – 500கி
ரவை – 1கி
கோதுமை மாவு – 1கி
உப்பு – 500 கி
துணிப்பை – 1.
இத்துடன் கரும்பு ஒன்றும் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இவை ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.

BREAKING!! பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு!! அரசாணை வெளியீடு!

இதனை கண்காணிக்கவும், மக்களிடையே சரியான முறையில் சென்று சேர்வதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்,மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவது குறித்த விரிவான அறிவுரைகள் தனியே வழங்கப்படும்”, எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web