Breaking! மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

 
Breaking! மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking! மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..!


வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கமும்சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால்,தங்களது மாநிலங்களவை பதவியை இருவருமே ராஜினமா செய்தனர்.


இந்நிலையில் தற்போது ,2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22.

Breaking! மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

அக்டோபர் 4 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் எனவும் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே,காலியாக இருந்த 1 இடத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு அதில் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்க்கது.

From around the web