கூடுதல் நேரம் பிரச்சாரம்... சீமான் மீது வழக்குப்பதிவு!

 
சீமான்  மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் ஈரோடு கிழக்குத்தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 10 முதல் 17ம் தேதி வரை  வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றதை அடுத்து  சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமான்

இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு  ஜனவரி 23ம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதல் நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும்  கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில்  கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web