டெல்லியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது... பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தல்

 
மோடி

இன்று மாலையுடன் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. நாளை மறுதினம் பிப்ரவரி 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3வது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் ஆனார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து சிக்கி சிறை சென்றது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2024 செப்டம்பர் 21-ம் தேதி முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியில் அமைச்சராக இருந்த அதிஷி முதல்வராக பதவியேற்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பேசி வருகிறார். டெல்லியில் மீண்டும் ஷீலா தீட்சித் மாடல் ஆட்சி கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தே.ஜ. கூட்டணியில் 2 இடங்களை மட்டும்
கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழு வீச்சில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அங்கு பல மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிப்பதால், தே.ஜ.கூட்டணியில் உள்ள பிரபல தலைவர்களும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். 70 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு

“பிப்ரவரி 8ம் தேதி பாஜக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைக்கும். பாஜக அரசு அமைந்ததும், வாக்குறுதிகளை நிறைவேற்றும். மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்துக்குள், டெல்லியில் உள்ள பெண்கள் ரூ.2,500 உதவித் தொகை பெறத் தொடங்குவார்கள். பெண்கள் எனக்கு கவசமாக பணியாற்றி மிகப் பெரிய பங்களிப்பை அளித்ததால்தான், எனது அரசு மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அதேபோல, டெல்லியிலும் பெண்கள் ஆதரவுடன் பாஜக வெற்றி பெறும். டெல்லி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள இரட்டை இன்ஜின் அரசு தேர்ந்தெடுக்கப்படும்” என்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் கூறினார்.  வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனால், உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web