இன்றுடன் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் ஓய்கிறது.. வெளியூர் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் வெளியேற உத்தரவு!

 
ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று  மாலையுடன் நிறைவு பெறுகிறது. வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

ஈரோடு  கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக, நடிகர் விஜய்யின் தவெக என அனைவரும் புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

 திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு

திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் திமுகவினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினமும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  

ஈரோடு

இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதனைத் தொடர்ந்து வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web