நல்ல காரியங்கள் செய்ய செவ்வாய் கிழமை ஏற்ற தினம் தானா?

 
நல்ல காரியங்கள் செய்ய செவ்வாய் கிழமை ஏற்ற தினம் தானா?

நாள் கிழமை பார்த்து செய்கிற காரியம் பாதி வெற்றியைத் தரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். செவ்வாய்கிழமை அதுவுமா புதுபுடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே…. செவ்வாய்க் கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா? வேற நல்ல நாள்ல தொடங்க கூடாதா என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு… எடுத்ததெற்கெல்லாம் இப்படி நாளுங்கிழமையும் பார்க்கலாமா என்று நினைத்ததை, நினைத்தப்படி நடத்திக்கொள்கிறவர்களும் உண்டு. ஜோதிடங்களை முழுமையாக நம்பவில்லையென்றாலும் அவையெல்லாம் விஞ்ஞானத்துடன் தொடர்பு கொண்டவை .

நல்ல காரியங்கள் செய்ய செவ்வாய் கிழமை ஏற்ற தினம் தானா?

திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். அதிலும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியை வைத்து புதன்கிழமை மட்டுமே நல்ல நாள் என்று நினைப்பவர்களும் உண்டு.
ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி,நவமி திதிகள்வரும் நாள்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள்.

நல்ல காரியங்கள் செய்ய செவ்வாய் கிழமை ஏற்ற தினம் தானா?

நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுபலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான். மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்தபலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்வது.

நல்ல காரியங்கள் செய்ய செவ்வாய் கிழமை ஏற்ற தினம் தானா?

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால்தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும்.

செவ்வாய்க்கிழமைகளில் புது ஆடை உடுத்தினால் அதிகம் சேரும். தான தருமங்களை செவ்வாயில் செய்தால் தருமம் செய்வதும் அதிகரிக்கும். செய்யும் செயல்கள் நல்லனவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க் கிழமையைத் தேர்ந்தெடுங்கள். புண்ணிய பலனை பெறுங்கள்.

From around the web