லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்... சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60), அவரது மனைவி கலாவதி (59) உள்ளிட்ட 5 பேர், நேற்று அதிகாலை 60வது திருமண விழாவிற்காக திருக்கடையூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்த போது தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் நரசிங்கன்பேட்டை அருகே எதிரே வந்த லாரி மீது இவர்களது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுப்பிரமணியன் மற்றும் கலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் உட்பட மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
