கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா மீது வழக்குப் பதிவு!! போலீசார் தீவிர விசாரணை!

 
கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா மீது வழக்குப் பதிவு!! போலீசார் தீவிர விசாரணை!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் விடுமுறை தினத்தை கொண்டாட சென்னையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் நீண்ட பயணம் செய்து கொண்டிருந்தார். தோழிகளுடன் ஜாலியாக சிரித்து பேசி கொண்டே கார் ஓட்டியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகை யாசிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா மீது வழக்குப் பதிவு!! போலீசார் தீவிர விசாரணை!


ஈசிஆர் சாலையில் நள்ளிரவு கார் நிலை தடுமாறி செண்டர் மீடியனில் மோதியது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்சேதம் ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை இயக்கியதாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web