உஷார்!!! தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!! இந்த 3 மாவட்டங்களில் சிக்கல்!!

 
உஷார்!!! தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!! இந்த 3 மாவட்டங்களில் சிக்கல்!!

தமிழகத்தில் திடீரென மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உஷார்!!! தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!! இந்த 3 மாவட்டங்களில் சிக்கல்!!

இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட 3 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

உஷார்!!! தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!! இந்த 3 மாவட்டங்களில் சிக்கல்!!

அதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நவம்பரில் 93 ஆக இருந்த கொரோனா தொற்று டிசம்பரில் 128 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

From around the web