குருவாயூர் உட்பட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்... திருச்சி வழித்தடங்களில் பராமரிப்பு பணி!
திருச்சி இரயில்வே கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாகச் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில இரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் திருச்சி கோட்ட இரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
திருச்சி - காரைக்கால் இரயிலில் மாற்றம்: திருச்சி - காரைக்கால் டெமு இரயில், வருகிற டிசம்பர் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதே தேதிகளில் காரைக்கால் - திருச்சி டெமு இரயில் காரைக்கால் - தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மதுரை கோட்டத்தில் பணி காரணமாக வழித்தடத்தில் மாற்றம் (காரைக்குடி வழியாக): மதுரை கோட்டத்தில் சோழவந்தான் - வாடிப்பட்டி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சில முக்கிய இரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன: செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இரயில்: வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் இரயில்: வருகிற டிசம்பர் 10 முதல் 14-ஆம் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் இரயில்: வருகிற டிசம்பர் 11 மற்றும் 14-ஆம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் இரயில்: வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு இரயில்: வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
