15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!
உலகம் முழுவதும் குழந்தைகள் சமூக வலைதளங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில், ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது.

இதேபோல், கிரீஸ் நாடும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த வரிசையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் , 'சமூக வலைதளங்களும், செல்போன்களும் நம்முடைய குழந்தைகளின் குழந்தைப்பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டத்தின்படி, 13 வயது முதல் பெற்றோரின் அனுமதியுடன் குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக் செயலிகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
