கோவை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி திடீர் மரணம்!
Dec 16, 2024, 19:58 IST
கோவை மாவட்டத்தில் 1998ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த குண்டுவெடிப்பு குறித்து அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உட்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏஸ்.ஏ. பாஷா சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்துள்ளார். ஏஸ்.ஏ. பாஷா கடந்த 3 மாதங்களுக்கு முன் பிணையில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
From
around the
web