இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!!

 
இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 2,000 இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 2000 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!!

இந்த நெருக்கடியான நேரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை உயர்த்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் வழிப்பறிக் கொள்ளைக்கு பாஜக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு மற்றும் திறன் தேர்வுகள் நடத்தியும், புதிய கல்விக் கொள்கையின் பெயரிலும் மாநில மக்களின் கல்வி உரிமையை பறித்து வருவதாக கூறி, பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து இன்று (08.06.2021) தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

From around the web