சென்னையில் கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் திருட்டு!
Jan 12, 2025, 07:52 IST

சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 6 மாத காலங்களாக பயோ மைனிங் முறையில் குப்பையை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் ராமஜெயம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web