அதிர்ச்சி!மன்மோகன் சிங்கிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

 
அதிர்ச்சி!மன்மோகன் சிங்கிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!


இந்தியாவில் கொரோனா 2வது அலை முதல் அலையை காட்டிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய,மாநில அரசுகள் செயல்படுத்தி வந்த போதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதிர்ச்சி!மன்மோகன் சிங்கிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!


அதிலும் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது.
இந்நிலையில், முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று தான் மக்களை கொரோனாவிலிருந்து விடுவிக்க 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

dinamaalai.com

From around the web