தலித் சிறுவன் மீது சிறுநீர் கழித்து அராஜகம்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!
உத்தரபிரதேச மாநிலம் சண்ட் கபீர் நகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் (தலித்) கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுவன் பஸ்தி மாவட்டம் கேப்டன்கஞ்ச் கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தான். இதனிடையே கடந்த 20ம் தேதி இரவு அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கலந்து கொண்டான்.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள் அந்த சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர். சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்து, சித்திரவதை செய்துள்ளனர். இந்தச் செயலை அவர்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது மாமா மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர்களிடம் குடும்பத்தினர் சென்று அந்த வீடியோவை செல்போனில் இருந்து நீக்குமாறு கூறினர். ஆனால், அந்த வீடியோவை நீக்க இளைஞர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, அந்த வாலிபர் மீது சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரை கேப்டன்கஞ்ச் பகுதியில் உள்ள போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், முகத்தில் சிறுநீர் கழித்து வாலிபர்கள் சித்ரவதை செய்ததையும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மறுத்த போலீஸார், அவமானம் தாங்க முடியாமல் நேற்றிரவு சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்ய மறுத்த கேப்டன் கஞ்ச் பகுதி காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!