தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி... தொண்டர்கள், காவல்துறைக்கிடையே தள்ளுமுள்ளு!

 
கேப்டன்

கேப்டன் விஜயகாந்த்தின் முதலாமாண்டு நினைவஞ்சலியை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கேப்டன்

அந்த வகையில் விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.

கேப்டன்

இதில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள், தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.  அமைதிப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், காவல்துறை மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web