சதுரகிரி மலையேற இன்று வரை பக்தர்களுக்கு அனுமதி!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!
இன்று ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினம் வரை சதுரகிரி மலையேறி சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சதுரகிரியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதம் தோறும் பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இன்று ஜனவரி 14ம் தேதி வரையிலான 4  நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

சதுரகிரி

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இரவு நேரத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.  

சதுரகிரி

அதே போல் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க கூடாது எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தைப் பொங்கல் தினத்தையொட்டி  பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர் .

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web