பைக்கில் முந்தி செல்வது தொடர்பாக தகராறு.. போலீஸ் எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்திய கல்லூரி பேராசிரியர் கைது!
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) பணிபுரியும் மணிமாறன் (59), இவர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம்-கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபருடன் முந்தி செல்வது தொடர்பாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
சிறிது தூரம் கழித்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் சவாரி செய்த எஸ்ஐயை இளைஞர் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில், படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த மணிமாறனை அப்பகுதி மக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பியோடியவர் மயிலாப்பூர் வைரம் தெருவைச் சேர்ந்த மகின் கோஸ்கா (26) என்பது தெரியவந்தது. ஆங்கிலோ இந்தியரான இவர் தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!