தீபாவளி ஸ்பெஷல்... ஈஸியாகவும், சுவையாகவும் அதிரசம் செய்ய ரெசிப்பி.. செம டேஸ்ட் !
ரொம்பவே ஈஸியாகவும், டேஸ்டாகவும் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாகவே பண்டிகைகள் என்றாலே கூடவே நினைவுக்கு பலகாரங்களும் வரும் தானே? பல வீடுகளில் தீபாவளிக்கு நோன்பு எடுப்பவர்கள் அதில் மிக முக்கியமாக வைப்பது அதிரசத்தை தான்.
அந்த காலங்களில் நம் பாட்டிகள் எல்லாம் அண்டாக்கள், பானைகள் நிறைய அதிரசங்களையும், முறுக்குகளையும், தேன்குழல்களையும் சுட்டு அடுக்கி வைத்தனர். இன்றைய காலகட்டத்தில் நோன்பில் வைக்கப்படும் சிறிய அளவிலான எண்ணிக்கையே பல பெண்களால் சுடமுடியவில்லை. காரணம் அதிரசம் என்றதும் மிகவும் கஷ்டமான வேலை . பாகு சரியாக செய்யவில்லை என்றால் அதிரசமே வராது என்ற பல சந்தேகங்கள் கேள்விகள். பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அதிரசம் செய்வது மிகமிக சுலபம்.
தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய்தூள் – 1சிட்டிகை
நல்லெண்ணெய் – சிறிதளவு
ஒரே கப்பை வைத்து அளக்க வேண்டியது அவசியம்.
செய்முறை
ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியினை 10 நிமிடம் காய வைக்கவும். அரிசி சற்று ஈரப்பதமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும்.

3/4 கப் வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்ல பாகு தயாரிக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.வெல்லப்பாகு சூடாக இருக்கும் போதே பச்சரிசி மாவில் ஊற்றி கிளற வேண்டும்.
மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி ஆறவிட்டு 2 அல்லது 3 நாட்கள் மூடி வைக்க வேண்டும். இப்போது அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். இந்த மாவினை வட்டமாக தட்டி மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்க சுவையும் , மணமும் வீட்டையே நிறைக்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
