வீட்டில பிரசவம் பார்க்காதீங்க... பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
சமீபகாலமாக வீட்டில் பிரசவம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனால் உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தாய், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதனை பின்பற்றி, புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு மாமியாரும், கணவரும் சேர்ந்து ‘யூ-டியூப்’ உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து சமூக வலைதளங்களை பார்த்து வீட்டிலேயே சிகிச்சை பெறுவது, பிரசவம் பார்ப்பது இவைகளும் அதிகரித்து வருகிறது. இது ஆபத்தில் முடியும் என தமிழக பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் செல்வவிநாயகம் பிரசவகால உயிரிழப்பை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவங்கள் நடைபெறுகின்றன. வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைப்பவர்கள், அதில் இருந்து மாற வேண்டும். இயற்கை பிரசவத்துக்கும், வீட்டு பிரசவத்துக்கும் வேறுபாடு உள்ளது. வீடுகளில் பிரசவம் பார்க்கும்போது, திடீரென ஏற்படும் சிக்கலான நிலையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
எவ்வித பிரச்சினையும் இல்லாத கர்ப்பிணிகளுக்குகூட திடீரென சிக்கல் வரலாம் பிரசவத்தின்போது தாய்க்கு அதிக ரத்தப்போக்கு, நோய் தொற்று, குழந்தைக்கு மூச்சுத் திணறல் இவைகள் ஏற்படலாம். மருத்துவமனைகளில் இதுபோல திடீரென ஆபத்து ஏற்படும் சூழல் உருவானால், இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். வீட்டில் அவ்வாறு அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!