அமாவாசை தர்ப்பண நேரத்தில் இதைச் செய்ய மறக்காதீங்க!

ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு நம்மைப் பார்க்க கிளம்பி வருவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகிறார்கள். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள்.
பித்ருக்களுக்கு யார் ஒருவர் தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறாரோ அவரை மட்டுமல்லாமல், அவரது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும் வல்லமை அமாவாசை பிரார்த்தனைகளுக்கு உண்டு.
அமாவாசையன்று எதையெல்லாம் செய்ய கூடாது? எதை செய்ய வேண்டும் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.
அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.
அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பவர்களுக்க்கும், அவரது சந்ததிகளுக்கும், பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம். அமாவாசை தினத்தில் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கங்கை தேவி வாசம் செய்கிறாள். அதனால் தான் தீபாவளியன்றும் கங்கா ஸ்நானம் செய்தாச்சா? என்று கேட்கிறோம்.
அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.
தர்ப்பணம் செய்த பின் வீட்டில் வாழையிலையில் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை, அவர்கள் விரும்பி உண்பவற்றை படையல் போட்டு விட்டு சாப்பிடலாம். கூடவே வாழைக்காயையும் மறக்காமல் சமையலில் சேருங்க. அமாவாசையன்று சமையலில் வெங்காயத்தையும், பூண்டு முதலியவைகளையும் சேர்க்காமல் இருப்பது உத்தமம்.
இவற்றுடன் தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு. அதனால் அமாவாசை விரதம் இருப்பவர்கள் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க. பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!