பகீர் வீடியோ... இந்தியா, நேபாளம், பூடானில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... 36 பேர் பலி!

 
நிலநடுக்கம்

 நேபாளத்தில் இன்று காலை 6.50 மணிக்கு 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உட்பட 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

38 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலநடுக்கம் இந்தியா, நேபாளம் மற்றும் பூடானிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, டெல்லி-என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. பீகார் தலைநகர் பாட்னா, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் உட்பட  வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web