ஈரோடு கிழக்கு தொகுதி...வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், முன்னதாக வாக்குச்சாவடிகளில் வேர்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க திரண்டிருந்த நிலையில், முதல் முறை வாக்களிப்பவர்கள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
அதன்படி இந்த நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, எப்எல்ஏ மற்றும் எப்எல்7 ஆகிய உரிமத்தலங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
இந்த நாட்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!