ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து.. 8 பேர் பலி.. பலர் படுகாயம்!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் ஒரு ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் இந்த ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blast at Ordnance Factory in Bhandara, Maharashtra
— Sneha Mordani (@snehamordani) January 24, 2025
🔴 Twelve people were trapped; two have been rescued so far.
🔴 The roof collapsed, and debris is being cleared with earthmovers.
🔴 Rescue teams and firefighters are working on-site.#blast #bhandara #bhandarablast… pic.twitter.com/zIE5ZCJNlc
மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. வெடிப்பில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் தற்போது மண் அள்ளும் கருவிகள் ஈடுபட்டுள்ளன. வெடிப்பு சத்தம் 5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கேட்டதாகவும், தொழிற்சாலையில் இருந்து நீண்ட நேரம் கடும் புகை எழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பந்தாரா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே கூறுகையில், “வெடிப்பின் போது தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இதுவரை எந்த காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் இதை "மோடி அரசாங்கத்தின் தோல்வி" என்று கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!