பகீர்.. அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல்.. இளைஞர்கள் வெறிச்செயல்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று தெலுங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த முதற்கட்ட தகவலில் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
மாணவர் சங்கத்தினர் வீட்டின் மீது பூந்தொட்டிகளை வீசியும், கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தலையிட்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் (ஜேஏசி) 8 பேரை கைது செய்து ஜூப்ளி சர்க்கிள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது மீண்டும் டொலிவுட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!