குடும்ப பகை.. இரு சிறுமிகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர இளைஞர்.. போலீசார் தீவிர விசாரணை!

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டாலால் கௌதம். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருமணமாகி கௌரி என்ற மனைவியும், சிருஷ்டி (14) மற்றும் விதி (6) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கவுதம், படுத்த படுக்கையாக உள்ளார்.
இந்த நிலையில், கௌதமின் மருமகன் விகாஸ் நேற்று இரவு தனது நண்பர்களுடன் கௌதமின் வீட்டிற்கு வந்தார். இரவு 9 மணியளவில், அவர்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, பின்னர் தூங்கச் சென்றனர். நள்ளிரவில், விகாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, முழு குடும்பத்தினரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினார். மேலும், கௌதமின் இரண்டு மகள்களின் கழுத்தையும் ஆயுதங்களால் வெட்டிக் கொன்றார். இந்தத் தாக்குதலில் கௌதமும் அவரது மனைவி கௌரியும் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, கௌரி உதவிக்காக கூச்சலிட்டார். பயந்துபோன விகாஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கௌரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடி அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். காயமடைந்த தம்பதியினரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப சண்டை காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!