ரூ26 லட்சத்தை இழந்த பிரபல நடிகை!! தனியார் நிறுவன மோசடி புகார்!!

 
ரூ26 லட்சத்தை இழந்த பிரபல நடிகை!! தனியார் நிறுவன மோசடி புகார்!!


தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து புன்னகை இளவரசியாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ரூ26 லட்சத்தை இழந்த பிரபல நடிகை!! தனியார் நிறுவன மோசடி புகார்!!


மேலும் கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தந்தனர். அவர்கள் கூற்றின் படி 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறினர் .

ரூ26 லட்சத்தை இழந்த பிரபல நடிகை!! தனியார் நிறுவன மோசடி புகார்!!

இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து வழங்கியதாகவும் சினேகா குறிப்பிட்டுள்ளார்.

ரூ26 லட்சத்தை இழந்த பிரபல நடிகை!! தனியார் நிறுவன மோசடி புகார்!!


முதலீடு செய்த பிறகு ஒரு மாதம் கழித்து வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்தனர். அத்துடன் தன்னை மிரட்டியதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் நடிகை சினேகா . இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web