பிரபல பிண்ணனி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

 
ஜெயச்சந்திரன்


 தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன்.இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் , உறவினர்கள், நண்பர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் மார்ச் 3,1944ல்  எர்ணாகுளத்தில் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற பின்  சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

ஜெயச்சந்திரன்


தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல்களை பாடி வருகிறார்.  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட பல  இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணிபுரிந்தவர்.  
‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’  உட்பட பல  பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார்.

ஜெயச்சந்திரன்

சுமார் 60 ஆண்டுகள் இசை உலகில் முண்ணனியில் இருந்து வந்தார். அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும்  அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web