மழைநீரில் சிக்கி பெண் டாக்டர் பரிதாப உயிரிழப்பு!

 
மழைநீரில் சிக்கி பெண் டாக்டர் பரிதாப உயிரிழப்பு!


புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி 35 வயதான சத்தியா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர் மாமியாருடன் காரில் துடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மழைநீரில் சிக்கி பெண் டாக்டர் பரிதாப உயிரிழப்பு!

மிக மெதுவாக , கவனமாக காரை ஓட்டிய போதும் ரயில்வே பாலத்தின் கீழே தேங்கி நின்ற மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது . உடனே சத்தியாவின் மாமியார் கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி விட்டார். ஆனால், சீல்ட் பெல்ட் அணிந்து இருந்ததால் சத்தியாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

மழைநீரில் சிக்கி பெண் டாக்டர் பரிதாப உயிரிழப்பு!


சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சத்தியா மாமியாரின் கண்முன்னே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவு செய்து மாமியாரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

From around the web