குவிந்த சுற்றுலா பயணிகள்... குமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!
Jan 16, 2025, 18:30 IST

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு பூங்காக்களிலும், சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் இன்று ஜனவரி 16 மற்றும் நாளை ஜனவரி 17 ஆகிய தினங்களில் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ஜனவரி 16, 17 ஆகிய நாட்களில் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web