’கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறையும் என்ற பயம்’- தமிழிசை சவுந்தரராஜன்

மாட்டு கோமியத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும், கோமியம் காய்ச்சலைக் குணப்படுத்தும் என்றும், கோமியம் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக ஐஐடி இயக்குனர் காமகோடி கூறினார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,” ” மாட்டு கோமியத்தில் ஆயுர்வேதம், ஆராய்ச்சி பூர்வமாக மைரோ ஆர்க்னிசத்தை காப்பாற்றும் சக்தி உள்ளது என கண்டுபிடித்து உள்ளனர்.
நமது தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டு உள்ளதா இல்லையா? மாட்டு சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமி நாசினி உள்ளது. 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்தாக உள்ளது கோமியம் என்பது மதுவை விட மோசமானது இல்லை. கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
மாட்டு சாணத்தை பயன்படுத்துவர்கள், மாட்டுக்கறியைச் சாப்பிடுவார்கள், மாட்டின் கோமியம் மருந்து என்று சொன்னால் எதிர்க்கிறார்கள் ஆயுர்வேதத்தில் மருத்துவமாக கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என கூறுகிறார்கள். நான் அலோபதி மருத்துவராக இருந்தாலும் எனக்கு கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. அலோபதி மருத்துவரான நான் இதை பற்றி பேசுகிறேன் என்றால் விஞ்ஞானத்தால் நிரூபிக்கபட்டிருக்கிறது.
எனவே, அதனால் தான் நான் இதனை பற்றி பேசுகிறேன். ஐஐடி இயக்குனரை இவர்கள் எப்படி ராஜினாமா செய்யுங்கள் என சொல்ல முடியும், கோமியம் குறித்து அவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்” என்று காமகோடியின் உரையை ஆதரித்து தமிழிசை பேசினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!