46 வேட்பாளர்களுடன் இறுதியானது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பட்டியல்!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 5ம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு அதனை வாபஸ் பெறும் நாளும் முடிவடைந்தது.
வேட்புமனு தாக்கல் இறுதி நாளான ஜனவரி 17வரையில் மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். திமுக சார்பில் விசி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அதில் ஜனவரி 18ல் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று ஜனவரி 20 பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெரும் காலம் முடிவடைந்துள்ளது. நேற்று 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதியாக, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. அதில் பத்மாவதி எனும் வேற்று மாநிலத்தவர் வேட்புமனு இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வேட்புமனு மட்டும் நேற்று மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக அவர் கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருபவர் என குறிப்பிட்டு அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக 46 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னம் கேட்டனர். அது வேறு ஒரு அரசியல் கட்சி வசம் உள்ளதால், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட மைக் (ஒலிவாங்கி) சின்னம் அக்கட்சி வேட்பாளர் சீதாலெட்சுமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!