’தன் கண் முன்னே இன்னொருவருடன் கள்ளக்காதலி உல்லாசம்’.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!
40 வயதான மோகன்ராஜ், சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி,37. இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜுக்கும், மீனாட்சிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வந்தனர். பின்னர் இருவரும் அமைந்தகரை முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த ஒரு வாரமாக ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மோகன்ராஜ், தனது நெருங்கிய நண்பரான ராமச்சந்திரனை (40) வீட்டுக்கு மது குடிக்க அழைத்துச் சென்றார். பின்னர், மோகன்ராஜ், அவரது கள்ளக்காதலி, ராமச்சந்திரன் ஆகிய மூவரும் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றனர். மோகன்ராஜ் நள்ளிரவில் எழுத்தைப் பார்த்தபோது மீனாட்சியும் ராமச்சந்திரனும் உல்லாசமாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ராமச்சந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!