கொரோனா 3 வது அலையை தடுக்க புதியஅலையை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க! ராதா கிருஷ்ணன்!

 
கொரோனா 3 வது அலையை தடுக்க புதியஅலையை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க! ராதா கிருஷ்ணன்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவில் 3 வது அலை வரலாம் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 3 வது அலையை தடுக்க புதியஅலையை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க! ராதா கிருஷ்ணன்!


இந்நிலையில் 3 வது அலை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டாவது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. உயிரிழப்புகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என பொதுமக்கள் கடுபம் சிரமங்களை சந்தித்தனர்.


இந்நிலையில் கொரோனா 3வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்து வர உள்ள கொரோனா அலையை எப்படி தடுப்பது என்று மருத்துவத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா 3 வது அலையை தடுக்க புதியஅலையை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க! ராதா கிருஷ்ணன்!

அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் தான் அடுத்த வரவுள்ள கொரோனா அலைகளை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
வரும் அலைகளுக்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதை போல தனியார் மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பணம் ஈட்டும் நோக்கில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அதன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

From around the web