நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

 
நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து இது வரை தமிழகத்திற்கு 2.1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 1.97 கோடி தடுப்பூசிகள் இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கு இதுவரை 20.32 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 14.22 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு கட்டண அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!


தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் ஜூலை 28 தொடங்கி வைக்கிறார். இதற்கான திட்டத்தை இன்று சென்னை மயிலாப்பூர் காவேரி தனியார் மருத்துவமனையில் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web