முதல் மதிப்பெண் பெறாததால் விரக்தி.. 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

 
சிறுவன்

கோயம்புத்தூர் அருகே வடவள்ளியில் உள்ள மகாராணி அவென்யூவைச் சேர்ந்தவர் பியூலா. அவரது மகன் சசீந்திரா (வயது 14). அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். நன்றாகப் படித்த சசீந்திரா, எப்போதும் தனது வகுப்பில் முதலிடம் பெறுவார். அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வை சசீந்திரா நன்றாக எழுதியிருந்தார். விடுமுறைக்குப் பிறகு கடந்த வாரம் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அவர் அங்கு சென்றபோது, ​​அரையாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு வழங்கப்பட்டது. மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது.

பள்ளி மானவி தற்கொலை

வழக்கமாகத் தேர்வில் முதலிடம் பெறும் சசீந்திரா, அரையாண்டுத் தேர்வில் 2 ஆம் இடத்தைப் பிடித்தார். பள்ளியில் எப்போதும் முதலிடம் பெறும் சசீந்திரா, இந்த முறை 2 ஆம் இடத்தைப் பிடித்ததால் மனம் உடைந்தார். இதைப் பற்றி தனது நண்பர்களிடம் கூறி அழுதார். வீட்டிற்குச் சென்றதும், தனது தாயிடமும் இது குறித்து கூறி அழுதார். அவரது தாயார் அவரை ஆறுதல்படுத்தினார். இருப்பினும், சசீந்திரா தனது நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களிடம் சரியாகப் பேசவில்லை. அவர் தனது தாயுடன் நன்றாகப்  பேசவில்லை என்றும், தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று, வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், அவரது தாயார் சிறிது நேரம் அவரிடம் பேசினார். பின்னர் காபி போடுவதற்காக பால் வாங்க கடைக்குச் சென்றார். பின்னர் பால் வாங்கி வீடு திரும்பினார். சசீந்திரன் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லை. பியூலா உடனடியாக அவரது பெயரைச் சொல்லித் தேடினார். படுக்கையறைக்குச் சென்றபோது, ​​சசீந்திரன் அங்கு தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கினார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சசீந்திரனை மீட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சசீந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசீந்திரனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வகுப்பில் எப்போதும் முதலிடம் பெறும் சசீந்திரன், அரையாண்டுத் தேர்வில் இரண்டாமிடம் பெற்றதால் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web