காந்தியவாதி சுப்பாராவ் உயிரிழப்பு!

 
காந்தியவாதி சுப்பாராவ் உயிரிழப்பு!


தமிழகத்தில் பெரும் புகழ்பெற்றவர் காந்தியவாதி 93 வயதான சேலம் நஞ்சுண்டையா சுப்பாராவ் இவர் பெங்களூருவில் 1929ல் பிறந்தவர். காந்தி சாகித்ய சங்கா என்ற பெயரில் சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.
1951ல் காங்கிரஸ் சேவா தளத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.

காந்தியவாதி சுப்பாராவ் உயிரிழப்பு!

நேரு, காமராஜர் போன்ற தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தார். ம.பி. சம்பல் பள்ளத்தாக்கில் காந்தி சேவா ஆசிரமம் தொடங்கினார். இந்நிலையில், காந்தியவாதி எஸ்.என்.சுப்பாராவ் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார்.


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் வேண்டுகோளுக்கிணங்க சுப்பாராவ் சிகிச்சைக்காக ராஜஸ்தான் வந்தார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web