மருத்துவரை கடத்தி ரூ.6 கோடி கேட்ட கும்பல்.. இறுதியில் ரூ.300 கொடுத்து வழி அனுப்பிய கலகல சம்பவம்!

கர்நாடகாவில் ஒரு மருத்துவரை கடத்தி, ரூ.6 கோடி கேட்டு, பின்னர் ரூ.300 கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனில் (45 வயது), கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் சூரியநாராயணப்பேட்டையில் உள்ள சனீஸ்வரர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். டாடா இண்டிகோ காரில் வந்த கடத்தல்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
A doctor in #Karnataka’s #Ballari district was kidnapped on the morning of January 26, while he was out for a morning walk, was let go by his kidnappers in the evening, for reasons unknown. The doctor was also given Rs 300 for a bus ride home.
— Hate Detector 🔍 (@HateDetectors) January 27, 2025
Dr Sunil, a paediatrician at the… pic.twitter.com/6TwYjguCKF
A doctor in #Karnataka’s #Ballari district was kidnapped on the morning of January 26, while he was out for a morning walk, was let go by his kidnappers in the evening, for reasons unknown. The doctor was also given Rs 300 for a bus ride home.
— Hate Detector 🔍 (@HateDetectors) January 27, 2025
Dr Sunil, a paediatrician at the… pic.twitter.com/6TwYjguCKF
அதே நாளில், சுனிலின் சகோதரர் வேணுகோபால் குப்தாவுக்கு, மது வியாபாரியான கடத்தல்காரர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அவரது சகோதரர் பாதுகாப்பாக வீடு திரும்ப, கடத்தல்காரர்கள் ரூ.6 கோடி கேட்டனர். கூடுதலாக, கடத்தல்காரர்கள் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை கேட்டனர். வேணுகோபால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். கடத்தல்காரர்கள் மாவட்ட எல்லையை கடப்பதைத் தடுக்க, மாவட்டத்தின் வெளியேறும் இடங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை சோதனை செய்தனர்.
இதனால் கலக்கமடைந்த கடத்தல்காரர்கள், இரவு 8 மணியளவில் மருத்துவரை ஒரு தொலைதூர இடத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்குச் செல்ல ரூ.300 பாக்கெட் மணியை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிர்ச்சியில் இருந்த சுனில் மீட்கப்பட்டார். கடத்தல்காரர்களைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டாக்டர் சுனிலின் சகோதரர் மது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால், கடத்தல் ஏதேனும் வணிகப் போட்டி காரணமாக நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். வேணுகோபால் மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!