எந்த கிழமைகளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும்?!

 
எந்த கிழமைகளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும்?!

சனிக்கிழமைகளில் கருடனை தரிசித்தால், லட்சுமி கடாட்சம் கிட்டும். வானில் கருட தரிசனம் செய்தால் சுப பலன்களை பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. கருடனிடம் நம் பிரார்த்தனைகளை தெரிவிக்க அதை கருடன் விஷ்ணு பகவானிடம் கூறுவதாக ஐதிகம்.

கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள். காயத்ரி மந்திரமே அவனுடைய கண்கள். தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை. சாம வேதமே அவனுடைய உடல் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

எந்த கிழமைகளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும்?!
  • கருடனை ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்திட நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம்.
  • திங்கட்கிழமை தரிசனம் செய்திட துன்பங்களும், துயரங்களும் நீங்கி சுகங்கள் கிடைக்கும்.
எந்த கிழமைகளில் கருடனை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும்?!
  • செவ்வாய் கிழமையில் தரிசிக்க துணிவும், மகிழ்ச்சியும் கூடும்.
  • புதன் கிழமைகளில் தரிசிக்க வஞ்சனை உள்ளம் கொண்டவர்கள், விரோதிகள் அழிந்து வெற்றி உண்டாகும்.
  • வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்.
  • வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருட தரிசனம் செய்திட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
From around the web