பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி விபத்தில் உயிரிழப்பு... 4 பேர் கைது!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

பெங்களூரு புறநகரான ஒசக்கோட்டை அருகே 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப் போவதாக கூறப்பட்ட வழக்கில், பைக் விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒசக்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 24-ந்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவள் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதையடுத்து பன்னரகட்டா போலீசில் புகார் அளித்தனர்.

பாலியல்

அடுத்த நாள் ஒசக்கோட்டை போலீசாரிடமிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில், “உங்கள் மகள் விபத்தில் உயிரிழந்துள்ளார்” என தெரிவித்தனர். இதனால் துயரத்தில் திளைத்த பெற்றோர், மகளின் சாவுக்கு சந்தேகம் இருப்பதாக மீண்டும் புகார் அளித்தனர்.போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. சிறுமியை பஸ்நிறுத்தத்தில் இருந்து கடத்திச் சென்ற குழு, அவளிடம் பலாத்காரம் செய்ய முயன்றபோது, பைக் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஒசக்கோட்டையைச் சேர்ந்த அஜய் என்கிற மனோஜ், இர்பான், முபாரக் மற்றும் இன்னொருவர் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறுமியை கடத்திச் சென்றபோது, அவள் தப்பிக்க முயன்றதால் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது என விசாரணையில் உறுதியானது.கைதான நால்வரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!