குட் நியூஸ்! வாடிக்கையாளர்களுக்கு புதிய வாக்குறுதி! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!

 
குட் நியூஸ்! வாடிக்கையாளர்களுக்கு புதிய வாக்குறுதி! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!


சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறுவதில் தனக்கென கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருப்பதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ் அப் செயலி. இந்நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் சமீபத்தில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்த கருத்துக்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்தும், அரசு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புக்களும், சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.

குட் நியூஸ்! வாடிக்கையாளர்களுக்கு புதிய வாக்குறுதி! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!


மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சூழ்நிலை உருவானது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப் பட்டுள்ளன. வழக்கின் விசாரணையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web