அரசு பேருந்து மோதி விபத்து... புதுமண தம்பதியர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
இளவரசி தம்பதி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது உறவினர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில், குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் இளவரசி. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணமானது.

திருமணம்

இந்நிலையில் இன்று காலை காவல் ஆய்வாளர் இளவரசியும், அவரது கணவர் கலைவேந்தனும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது அரசுப் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தம்பதியர் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web