அனுமதி இலவசம்... வேலை தேடுபவர்களுக்கு குட்நியூஸ்... அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!

 
அரசு வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள  அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்கள் அதிக அளவில் தனியார்துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து டிசம்பர் 27ம் தேதி  வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

வேலை வாய்ப்பு முகாம்


இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு. ஐ.டிஐ + டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு  பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

சிறப்பு முகாம்
வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.  இம்முகாமில் கலந்துகொள்ளும்  வேலை அளிப்பவர்கள் தங்கள் தகவல்களை  தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும்.  இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி - 27.12.2024
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் - கிண்டி ஆலந்தூர்  மாவட்ட வேலைவாய்ப்பு மையம்
கல்வித் தகுதி - 8 ம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை, பொறியியல் உட்பட  அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்
கட்டணம் - இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை, இலவசம்.
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web