பிரம்மாண்ட சமத்துவ பொங்கல்.. 5000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு!

திருப்பூர் மாநகராட்சியின் 24வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகையின் போது ம.தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், இன்று, 27வது ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவை திருப்பூர் மாநகராட்சியின் 24வது வார்டு கவுன்சிலரும், ம.தி.மு.க.,வின் நகராட்சி மாவட்டச் செயலாளருமான நாகராஜ் ஏற்பாடு செய்தார்.
இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த 5000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக, சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் முலாப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பெண்கள் தொடர்ந்து பாடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்று, இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!