பெரும் ஷாக்.. பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்!

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனை மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீரர்கள் பஞ்சாப் மாநிலம் குருகிராமில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிக்காக சென்றுள்ளனர்.
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
— Raj Satyen - Say No To Drugs & Dmk (@satyenaiadmk) January 24, 2025
விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது… pic.twitter.com/IEfggEgBRr
குருகிராமில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்ற அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது நாற்காலிகளை வீசி கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டியின் போது நடுவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் பாண்டியை பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பீகார் விராங்கனைகள் அங்கிருந்து நாற்காலிகளை எடுத்து தமிழக விராங்கனைகள் மீது வீசினர். இந்தத் தாக்குதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த சில தமிழக அரசியல் தலைவர்கள் இதைக் கண்டித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!